24 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சின்னம்மை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

Share

இலங்கையில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி தற்போது மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னணி தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசிகள் இல்லையென்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தடுப்பூசி, சந்தையில் 7,500 முதல் 9,500 ரூபாய் வரையான விலையில் விற்பனையாகிறது.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அரச மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகளின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளது.

இதற்கிடையில், அண்மைய வாரங்களில் சின்னம்மை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சுகாதார அதிகாரிகள் கவனித்துள்ளதாக, குழந்தை மருத்துவ ஆலோசகர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிக்கன் பொக்ஸ் என்ற சின்னம்மை நோய் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும்.

இது முதன்மையாக தடுப்பூசி போடப்படாத நோயுள்ளவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கு பரவுகிறது.

இதன்படி, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் உள்ள, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத 90 வீதமானோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...