25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

Share

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பாக, கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

கொழும்பு மாநகர சபை மக்கள் திசைகாட்டியை நிராகரிக்கும் சூழ்நிலையில், திசைகாட்டியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...