24 660eccb925a3c
இலங்கைசெய்திகள்

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

Share

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனு இன்றைய தினம்(04) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு மைத்திரிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனுவில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் கட்சிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...