பதிலளிக்காமல் நழுவிய கோட்டாபய

6 1

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோரியுள்ளார். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வெளியேறினார் அவர்.

நாரஹேன்பிட்டி விகாரையில் நடைபெற்ற போதி பூஜையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதி பூஜையில் அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுநாயக்க வேடருவே உபாலி தேரர் தலைமையில் போதி பூஜை இடம்பெற்றது.

Exit mobile version