24 6648028d39d92
இலங்கைசெய்திகள்

இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு : அமெரிக்காவில் வரலாற்று தீர்மானம்

Share

இலங்கை தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு : அமெரிக்காவில் வரலாற்று தீர்மானம்

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் முன்வைத்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸின் 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில் அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel ) இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

H-RES 1230 என அழைக்கப்படும் இந்த தீர்மானம், ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

அத்துடன் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் நிரந்தர தீர்வைக் காண தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுக்கிறது.

இலங்கையில் இனப்போர் முடிவடைந்த 15வது ஆண்டு நிறைவை ஒட்டிய இந்த தீர்மானம், தீவில் சிங்களவர்களும் தமிழ் மக்களும் தனித்தனியான இறையாண்மையை கொண்டிருந்த காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தை நினைவுபடுத்தியுள்ளது.

1833 இல் ஆங்கிலேயர்கள், ஒற்றை ஒற்றையாட்சி நிர்வாகத்தின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் பிரதேசங்களை இணைத்ததை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக, 1976 தமிழர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமெரிக்க தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களுடன் எந்த ஆலோசனையும் இன்றி கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படையில், தமிழர்களின் அபிலாசைகளுக்கு அது தீர்வாக அமையாது என்று தமிழர்களின் தலைவர்கள்,அதனை நிராகரித்ததையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் 6வது திருத்தம் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகவும், தமிழர்களின் தாயகம் சுயராஜ்யமற்ற பிரதேசமாகவே உள்ளது என்றும் தீர்மானம் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை இந்த தீர்மானம் மேற்கோள் காட்டியுள்ளது.

திமோர், பொஸ்னியா, எரித்திரியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில், அந்தந்த மோதல்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் சுதந்திர வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தீர்மானத்தின் முதன்மைக் கோட்பாடுகளாக 1. ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்காவை வலியுறுத்துதல் 2. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்துதல் 3. இலங்கை செய்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...