இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : வெளியான தகவல்

20 12
Share

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : வெளியான தகவல்

ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க (Anukumara Dissanayake) எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு (India) வருகை தருவார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும் என இந்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அநுகுமார திசாநாயக்க, தனது விஜயத்தின் போது, இருதரப்பு சந்திப்புகள் இந்திய குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீடு மற்றும் வணிக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக புதுடில்லியில் (New Delhi) நடைபெறும் வணிக நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர் புத்த கயாவுக்கும் செல்வுள்ள நிலையில், ஜனாதிபதி திசாநாயக்காவின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...