tamilnaadi 18 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

நாட்டிற்கு கிடைக்கும் டொலர்களின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஜனவரி மாதம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஜனவரி 2020க்கு பிறகு நாடு கண்ட அதிகபட்ச மாதாந்திர மதிப்பு இதுவாகும்.

இதேவேளை 2023 டிசம்பரில் 269 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2023 ஜனவரியில் 154 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஜனவரியில் இலங்கையின் சுற்றுலா வருவாய் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் நாடு 208,253 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன் இது 2023 இல் 102,545 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திருந்தது.

இதற்கிடையில், 2024 ஜனவரியில் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தைப் பொறுத்தமட்டில், முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

ஜனவரி 2023 இல் 437 மில்லியன் டொலர்கள் மற்றும் 2023 டிசம்பரில் 570 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜனவரி 2024 இல் தொழிலாளர்களின் பணம் 488 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2022 இல் குறிப்பிடத்தக்க மீட்சியை பதிவு செய்ததில் இருந்து, இடையிடையே பருவகால ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் பரந்த அடிப்படையிலான அதிகரித்து வரும் போக்கை தொடர்ந்து பதிவு செய்ததாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...