2 20
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பார்களை விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டு

Share

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பார்களை விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை விலைக்கும் வாங்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என முசம்மில் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கி ஆதரவு திரட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்ய வேண்டுமென மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

முசம்மில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக நீண்ட காலம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...

Untitled 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்: பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை...

Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...

Untitled 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியில் நிதானம்: இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

இலங்கையில் தற்போது புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி...