caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

Share

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு (நவ 01) ஆலயத்தின் 6 உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆலயத்தின் பின் கதவு வழியாக இரவில் உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட உண்டியல்களில் உடைக்கப்பட்ட மூன்று உண்டியல்களை, பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசிச் சென்றுள்ளனர்.

திருடர்கள் தமது உருவங்கள் பதிவாகாமல் இருக்க, ஆலயத்தின் பிரதான காரியாலயத்தில் உள்ள முழு CCTV கண்காணிப்பு இணைப்பையும் துண்டித்துள்ளதுடன், காணொளிகளைச் சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும் (DVR) பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்.

ஆலய நிர்வாகம் முறைப்பாடு பதிவு செய்ததைத் தொடர்ந்து, நுவரெலியா காவல்துறையினர் ஸ்தலத்துக்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் காவல்துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்ததுடன், மோப்ப நாயின் உதவியுடனும், ஆலயத்தின் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கண்காணிப்புக் கமரா பதிவுகளைக் கொண்டும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்டியல்களை உடைத்துத் பெருந்தொகையான பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு இன்னும் கணக்கொடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...