30 2
இலங்கைசெய்திகள்

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

Share

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வட் வரியை ஏய்ப்புச் செய்த நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர்களான கணவன் – மனைவி ஆகியோருக்கே கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த தம்பதி தமக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செலுத்தப்பட வேண்டிய வட் வரி சுமார் மூன்று கோடி ரூபாவைச் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்துள்ளனர்.

அதற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த தம்பதியினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மூன்று கோடி ரூபா வரியை செலுத்த மேலும் ஐந்து வருட கால அவகாசம் கோரப்பட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மேற்குறித்த தம்பதிக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...