1 34
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சிக்குள் குளறுபடி! பழிவாங்கப்பட்ட சிவமோகன்

Share

தமிழரசுக் கட்சிக்குள் குளறுபடி! பழிவாங்கப்பட்ட சிவமோகன்

இலங்கை தமிழரசுக் கட்சியின்(ITAK) முல்லைத்தீவு மாவட்டக் கிளைத் தலைவர் மருத்துவர் சி.சிவமோகனை (S. Sivamohan) கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால், சிவமோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், “வவுனியாவில் (28.12.2024)ஆம் திகதி நடைபெற்ற எமது கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுகிறீர்கள் என்பதை இத்தால் அறியத்தருகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 காலப்பகுதியில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்து, கட்சிக்கும் கட்சிசார்ந்த வேட்பாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபட்டதை கட்சி அறிந்துள்ளது.

எனவே, இச்செயற்பாட்டிற்காக உங்களிடம் விளக்கம் கோருவதோடு உங்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவுபெறும் வரை தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என அறியத்தருகிறேன்.

உங்கள் விளக்கத்தை இக்கடிதம் கிடைத்து ஒருவார காலத்திற்குள் எனக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...