1 50
இலங்கைசெய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு இலங்கையில்

Share

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அதே படத்தில் நடித்துவரும் மற்றொரு நடிகரான ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரையில் நடைபெற்றுவந்த குறித்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.

1960களில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது.

குறித்த திரைப்படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...