24 665bb2ed266a1
இலங்கைசெய்திகள்

சுமந்திரனின் ஊது குழல் நான் அல்ல: சீ.வீ.கே.சிவஞானம்

Share

சுமந்திரனின் ஊது குழல் நான் அல்ல: சீ.வீ.கே.சிவஞானம்

சுமந்திரனின் (M.A.Sumanthiran) ஊது குழல் தாம் அல்ல என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் (C.V.K.Sivagnanam) தெரிவித்துள்ளார்.

தமிரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கருத்துப் பரிமாற்றம் என்பது சதி நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு நடைபெறுவதாக ஊடகங்களில் தான் நானும் பார்த்தேன். எனக்கென்றால் இதைப் பற்றி எதுவும் தெரியாது.

என்னுடன் எதுவும் சுமந்திரன் கதைக்கவும் இல்லை. இது தொடர்பில் எதுவும் சொல்லவும் இல்லை. ஆனால் ஊடகங்களில் பார்த்த போது இரண்டு தரப்பு கருத்துக்களும் பகிரப்படுவதாகத் தான் இருக்கிறது.

அப்படி செய்யலாம் தானே. எந்தவொரு விடயத்திற்கும் இரண்டு பக்க கருத்துக்கள் இருக்கும். இது இரண்டு அணிகள் என்றில்லை. இரு வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் தான் இருக்கிறது.

மேலும் அப்படி அணிகள் என்றால் எங்களுடைய கட்சிக்குள் தான் இருக்கிறது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.அது தவறு என்று சொல்லவில்லை.

அவ்வாறு தங்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை. என்னைப் பொறுத்தவரையில் வேட்பாளர் தெரிவிலேயே இது முடங்கும் என்று நான் முதலிலேயே கூறியிருந்தேன்.

அப்படி நான் கூறி பல நாட்களின் பின்னர் தான் சுமந்திரன் கூட இந்தக் கருத்தை கூறியிருந்தார்.

ஆனால் இப்போது நான் இதனை கூறினால் சுமந்திரன் சொல்வதை நான் கூறுவதாகவும் சுமந்திரனின் ஊது குழல் என்றும் என்னை கூறுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. நான் அவருக்கு குழல் ஊதவில்லை. அதேநேரம் என்னைக் கேட்டும் சுமந்திரன் இதனை பேசவில்லை.

அவருடைய கருத்தோ என்னுடைய கருத்தோ எதுவாகவும் இருக்கலாம். அதே நேரம், மக்களின் கருத்து மாறுபட்டும் இருக்கலாம். அதற்காக கருத்து வேறுபாடுகள் இல்லாமலும் இல்லை” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...