24 665b88ca93e35
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் இழப்பு

Share

இலங்கைக்கு ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் இழப்பு

இலங்கையில் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த பத்து வருடங்களில் 51,150 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் வரலாற்றில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகவும் அது 34,000 மெற்றிக் தொன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேயிலை உற்பத்தி 2015 இல் 328,800 மெற்றிக் தொன்களாலும், 2020 இல் 278,489 மெற்றிக் தொன்களாலும், 2023 இல் 256,039 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேயிலை ஏற்றுமதி 2013 இல் 319,700 மெற்றிக் தொன்களாலும் 2015 இல் 306,900 மெற்றிக் தொன்களாலும் 2020 இல் 265,569 மெற்றிக் தொன்களாலும் 2023 இல் 241,912 மெற்றிக் தொன்களாலும் குறைந்துள்ளதாக அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினால் ஏற்படும் இழப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையில் 75 வீதத்திற்கு சமம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...