அரசியல்இலங்கைசெய்திகள்

இயக்கச்சி வட்டார மக்களுடன் சிறீரன் சந்திப்பு

Share
23 649af39535768
Share

கிளிநொச்சி – இயக்கச்சி வட்டார மக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரன் நேற்று(26) இருவேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி வட்டாரத்திலுள்ள கோயில் வயல், சங்கத்தார் வயல், YMCA விநாயகபுரம், கொற்றாண்டார்குளம், இயக்கச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், சிறீரனுக்கும் இடையிலான இருவேறு சந்திப்புகள் நேற்றைய தினம் இயக்கச்சியில் நடைபெற்றுள்ளன.

இருவேறு சந்திப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், இயக்கச்சி வட்டார வேட்பாளருமாகிய தவராசா ரமேஸ் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமுர்த்திக் கொடுப்பனவு, அரச நலத் திட்டக் கொடுப்பனவு என்பவற்றில் நிலவும் குறைபாடுகள், தொடர்ச்சியாக தாம் எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி நிலைமை, வீட்டுத்திட்டத் தேவைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்பிரதேச மக்கள், நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர்.

மேற்படி சந்திப்புகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா, இயக்கச்சியில் இயங்கும் பல்வேறு சமூகமட்ட அமைப்புகளினதும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...