tamilni 319 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

Share

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழர்!

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் உள்ளடங்களாக மூன்று வேட்பாளர்கள் போட்டியிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் இங் கொக் சாங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதுடன் அன்றையதினம் அந்நாட்டு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபற்றும் தமிழர் ஒருவர் உட்பட மூவரும் நேற்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதன்போது வேட்ப்பாளர்களுக்கு மக்களிடம் உரையாட இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அங்கு கருத்து தெரிவித்த தர்மன் சண்முகரட்ணம்,கண்ணியமான போட்டி, நியாயமான பிரச்சாரம் என்பவற்றுடன் முழு மனதுடன் சிங்கப்பூர் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நமது எதிர்காலம் மேலும் கடினமானதாகவும் சவாலானதாகவும் இருக்கப்போகிறது. அதனால் பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களையும் திறன்களையும் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற இந்த போட்டியில் களமிறங்கியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...