இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடு முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி!

perayar
Share

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் இன்று காலை 8 45 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, பேராயரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...