ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆசிரியர் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெருக்கடி நிலைக்குத் தீர்வு கோரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக இன்று பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
#SriLankaNews