13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

Share

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார்.

பிரித்தானிய அரசின் கடுமையான வரி விதிகளால் விரக்தியடைந்த இந்தியப் பெருமைமிகு தொழில் குடும்பத்தின் வாரிசான ஷ்ரவின் பார்த்தி மிட்டல் (வயது 37), இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) குடியேறியுள்ளார்.

மொத்தம் 27.2 பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட பார்த்தி மித்தல் குடும்பத்தின் முக்கிய பங்குதாரரான இவர், BT Group Plc நிறுவனத்தில் 24.5 சதவீதம் பங்கு வைத்துள்ளார்.

லண்டனில் JPMorgan Chase நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஷ்ரவின், பின்னர் பார்த்தி என்டர்ப்ரைசஸ் குழுமத்தில் இணைந்தார். இவர், Bharti Global நிறுவனத்தின் முன்னாள் மேனேஜிங் டைரக்டராக இருந்தார்.

BT நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பிறகு, அவர் அமீரகத்திற்கு இடம்பெயர, அவரது சகோதரி ஈஷா மிட்டல் (Eiesha Mittal) அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

2024-ல் கன்சர்வேடிவ் அரசு non-domiciled குடிமக்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கு காலத்தை 15 வருடங்களில் இருந்து வெறும் சில ஆண்டுகளாக குறைத்தது.

ஜூலை 2024-ல் லேபர் அரசு அதிகாரத்தில் வந்ததும், வெளிநாட்டுச் சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட மரபணு வரிவிலக்கும் நீக்கப்பட்டது.

இதனால் பல பணக்காரர்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வருகின்றனர். எகிப்திய பில்லியனர் நாசெப் சவிரிஸ், ப்ரிட்டிஷ்-சைப்ரியட் குடும்பமான லசாரி குடும்பத்தினரும் வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள 74,000 ‘non-doms’ இல் ஒரு பங்குகூட வெளிநாடு செல்லும் பட்சத்தில், நாட்டிற்கு பாரிய வரி வருமான இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...