24 660111922cf40
இலங்கைசெய்திகள்

சுகாதார சேவையின் நவீன மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல் அவசியம்

Share

சுகாதார சேவையின் நவீன மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல் அவசியம்

நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்துவது அசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற “தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் காலனித்துவக் காலத்திலிருந்து இலவச மருத்துவ முறைமை காணப்படுகிறது.

அதனை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், அந்தக் கடந்த கால அனுபவங்களுடன் நாட்டில் தரமான மற்றும் உயர்தர சுகாதார சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இந்தப் புதிய மாற்றங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைவருடனும் பரந்த உரையாடலை நடத்த எதிர்பார்க்கின்றோம்.

மேலும், அதற்கான யோசனைகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றேன்.இந்தக் கலந்துரையாடல்கள் அனைத்தையும் அரசியல்மயப்படுத்தாமல் தர்க்க ரீதியாக மேற்கொள்வது முக்கியம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....