tamilni 615 scaled
இலங்கைசெய்திகள்

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!

Share

யானைகளால் விரைவில் ஏற்படவுள்ள அபாயம்!

யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,வறண்ட பிரதேசம் முழுவதும் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாகும்.

நாடு முழுவதும் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% ஆகும்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் இருந்து யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருக்கின்றது.

யானை மற்றும் மனித உயிர் இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் இடம்பெற்று வரும் இவ்வாறான செயல்களுக்கு அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...