ஒக்டோபரில் அரிசிக்குத் தட்டுப்பாடு! – பேராசிரியர் எச்சரிக்கை

Senior Professor Buddhi Marambe e1653801064235

தவிர்க்க முடியாத வகையில் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று பேராதனைப் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபோகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த முறை 3 இலட்சத்து 15 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகின்றது.

வழமையாக சுமார் 4 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும்.

சிறுபோகத்துக்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் அவசியமாகின்றது.

எனினும், தற்போது நாட்டில் இரசாயன உரத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதோடு அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் இந்த முறை சிறுபோக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version