10 2
இலங்கைசெய்திகள்

இரண்டு பிரதேசதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

Share

இரண்டு பிரதேசதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொனராகல நாமல்ஓய மற்றும் இங்கினியாகல பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இவ்வாறு நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை நாமல்ஓய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சக உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தானும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இங்கினியாகல நெல்லியத்த பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

54 வயதான பெண் ஒருவரும், அவரது 17 வயதான மகளும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், உயிரிழந்த ஏனைய மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...