24 6657e76669eab
இலங்கைசெய்திகள்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்

குருநாகல்-குளியாப்பிட்டி மருத்துவ அதிகாரி அலுவலகத்தினால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையின்போது, குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் (SLTB) உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் (Blood Pressure) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் பணியாற்றும் அனைத்து தனியார்துறை ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக விரைவில் மருத்துவ முகாமை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முரண்பாடான செயல்: நாமல் ராஜபக்ச விமர்சனம்!

நாட்டில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் உறுதியளித்திருந்த நிலையில், திடீரென...

24 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலா மேம்பாடு: 2026-2028 வரை ரூ. 2,667 மில்லியன் ஒதுக்கீடு!

இலங்கையின் சுற்றுலாத் துறையை நீண்டகால மற்றும் நிலைபேறான முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2026 முதல்...

23 5
செய்திகள்இலங்கை

இலங்கை – நேபாளம் இடையே புதிய விசா விலக்கு ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி!

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்,...

22 8
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...