rtjy 114 scaled
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share

சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொலிஸ்துறையின், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களினபடி, கடந்த அக்டோபர் மாதத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பை கொண்டுள்ளன.

அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட மொத்தம் 131 சிறுமிகள் உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த செப்டம்பரில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வெளியிட்ட தகவலில், அந்த மாதத்திற்குள் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் தகாத முறையில் வழிநடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இவற்றில் 22 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .

Share
தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...