மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இலங்கைசெய்திகள்

மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்

Share

மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளதாவது, வடக்கு, கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாகக் கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளனர்.

ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கைவைக்கும் பொது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம். அத்துடன், பௌத்த சமயத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

மைதிரிபால சிறிசேன உண்மையில் சைவர். ஆனால் அவர் உலக்திற்காக பௌத்தராக வாழ்ந்து வருகின்றார் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனாவிடம் கூறியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...