மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இலங்கைசெய்திகள்

மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்

Share

மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளதாவது, வடக்கு, கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாகக் கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளனர்.

ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கைவைக்கும் பொது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம். அத்துடன், பௌத்த சமயத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

மைதிரிபால சிறிசேன உண்மையில் சைவர். ஆனால் அவர் உலக்திற்காக பௌத்தராக வாழ்ந்து வருகின்றார் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனாவிடம் கூறியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....