tamilni 159 scaled
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Share

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட இடமாற்ற விண்ணப்பத்தில் சசி வீரவன்ச, தமது வழக்கு விசாரணையில், கொழும்பு பிரதான நீதவானின் நடத்தை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு, வழக்கை வேறு எந்த நீதவானுக்கும் மாற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இரண்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சசி வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முதலாவது வழக்கில் சசி வீரவன்ச குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...