2 21
இலங்கைசெய்திகள்

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன்

Share

ஸ்டாலினுடன் செல்பி எடுத்த சாணக்கியன்

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுடன் (R.Shanakiyan) செல்பி எடுத்துள்ளார்.

அத்துடன் இதன்போது ஈழத்தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தமிழக முதல்வருடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் (12.01.2025) தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பனையகங்களும் இடம்பெற்றிருந்தது.

அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் அவரே அவரது தொலைபேசியில் எம்மை செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் (M. A. Sumanthiran) என்னுடன் கலந்து கொண்டிருந்தனர்.” என தெரிவித்தார்.

இதேவேளை சென்னையில் இடம்பெறும் குறித்த நிகழ்விற்கு சென்ற போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S. Shritharan) விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...