Sanakkiyan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வீடுகளை நிர்மாணிப்பதில் பாரபட்சம்! – சாணக்கியன் குற்றச்சாட்டு

Share

வடக்கு, கிழக்கில், நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், “நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., “இந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதி அமைச்சர், “குறித்த வீடுகளுக்கு 6 இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

எனினும், வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...