tamilnih 82 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற செந்தில் தொண்டமானின் காளை

Share

உலகப்புகழ் பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது.

மதுரை அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி ஆரம்பித்து வைத்தார்.

அலங்கா நல்லூர் ஏறுதழுவுதலில், மொத்தம் 810 காளைகள் பங்கேற்றிருந்தன. சிறப்பாக களமாடிய முதல் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டதோடு இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.

மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடத்தையும், சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும், குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அலங்கா நல்லூர் ஏறுதழுவுதல் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளையும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...