மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

rtjy 12

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக பணம் கோரியதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்ய தயாராக இருப்போரிடம் இருந்து குறித்த அதிகாரி கையூட்டலை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version