rtjy 205 scaled
இலங்கைசெய்திகள்

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகிய நாமல்

Share

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகிய நாமல்

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தாம் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்களிப்பில் இருந்து விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு நிவாரணம் வழங்க தாம் முன்வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சாதக மற்றும் பாதக அம்சங்களைக் கொண்டுள்ளது சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது.

கடந்த முறை முன்வைக்கப்பட்ட அதாவது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையே இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற ரீதியில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்காக முன்னிறுத்தி அவர்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் செயற்படுவது தனது கடமையாகும்.

மேலும், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.” என்றார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...