14 34
இலங்கைசெய்திகள்

மன்னார் வங்காலையில் கடலரிப்பு: ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்

Share

மன்னார் – நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பார்வையிட்டுள்ளார்.

அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த விஜயம் இன்று(28.05.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

ஏற்கனவே கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப் போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டால் மாத்திரமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அப்பகுதி மக்கள் துரைராசா ரவிகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6839e6fb171fc
இலங்கைசெய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட அரச வங்கி காசளர் கைது

இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு...

25 6839ea056de1c
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில்(Jaffna) பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை...

harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...