25 683909359e026
இலங்கைசெய்திகள்

ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

16 வயது பாடசாலை மாணவனை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டு, அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரை கொலைக் குற்றவாளி என அறிவித்து, நேற்று அவருக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்.

2014 ஏப்ரல் 9 ஆம் திகதியன்று, பசறை பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட ரத்நாயக்க முதியான்செலாகே ஹீன்பண்டா என்பவரே, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவத்தின்போது, மாணவரான பிரான்சிஸ் சுதர்சன் என்பவரை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டதால் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் மதுபோதையில் இருந்தார் என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...