மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

9 18

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெவினுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.

மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் இந்த ஆசிரியை கைது செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி நன்றாக ஆங்கிலம் கற்றுக் கொண்டதன் காரணமாக ஆசிரியர் மாணவியுடன் நெருங்கிப் பழகி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலம் என்பனவற்றின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version