2 10
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

Share

பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

நிவித்திகல – வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில் மாணவியின் பாடசாலை புத்தகப் பை மற்றும் இரத்தக்கறை என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் மரத்தின் ஒரு பகுதி மாணவியின் தலையில் விழுந்திருக்கலாம் எனவும் மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், தமது மகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு உதவி கேட்ட போது அங்கிருந்தவர்கள் உதவவில்லை என மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...