காதலிக்கு தகவல் வழங்கி விட்டு மாணவனின் விபரீத முடிவு
இலங்கைசெய்திகள்

காதலிக்கு தகவல் வழங்கி விட்டு மாணவனின் விபரீத முடிவு

Share

காதலிக்கு தகவல் வழங்கி விட்டு மாணவனின் விபரீத முடிவு

ஹொரனை பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

“நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என தனது காதலிக்கு தொலைபேசிக்கு அழைத்து கூறிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

படுவிட்ட வடக்கில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்து ஹோட்டல் கற்கைநெறியை பயின்று வந்த தினேத் தஷ்மிகா தேவ் ஷி விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரின் உற்ற தோழியின் வீட்டில் தங்கியிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் புலத்சிங்கல பிரதேசத்திற்கு சென்று கற்கை நெறிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 8ஆம் திகதி வழமை போன்று பாடநெறிக்காக சென்று தனது வீட்டுக்குச் திரும்பிய இளைஞன் அன்று இரவு உறங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் குறித்த இளைஞனை எழுப்ப வீட்டின் உரிமையாளரின் சகோதரி அறைக்குச் சென்றதாகவும் இளைஞனின் சடலம் கட்டில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அன்றைய தினம் இரவு தனது 17 வயது காதலிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என்று கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...