tamilnih 11 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல்

Share

இலங்கையில் பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல்

தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று தயார் செய்யப்பட்டு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டினால் இந்த நெகிழ்ச்சியான செயல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரியின் 67 ஆண்டுகால வரலாற்றில் நடைபெறும் முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும். காலி இமதுவ ஸ்ரீ குணரத்ன ஆரம்ப பாடசாலை 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பல குறைபாடுகளுக்கு மத்தியில் இப்பாடசாலை நீண்டகாலமாக மூடப்படும் அபாயத்தில் இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன் இப் பாடசாலையின் அதிபராக பத்மசிறி பாடசாலைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதற்கமைய, பாடசாலைக்கு குறையாக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பாடசாலை சமூகம் எதிர்கொண்ட மிகக் கடுமையான சவாலாக நிதி காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதான வீதியின் இருபுறங்களிலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கஞ்சி விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலையின் அதிபர் மற்றும் பெற்றோரின் சிறப்பான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...