yh 1 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Share

இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை(22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மேலும், புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...

04 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலைகளை மூடப் போவதில்லை: வாரத்தில் 4 நாட்கள் வகுப்புகள்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை...

03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...

02 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் QR முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு: முறைகேடுகளில் ஈடுபட்ட 153 பேருக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீள அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு (National Fuel Pass) முறைமையில்...