15 9
இலங்கைசெய்திகள்

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பிரதான நிலை தேசிய பாடசாலைகளை தவிர மற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மேலும், தென் கொரியாவின் கொய்கா நிறுவனம் 85 பில்லியன் டொலர்களை ஓசியன் பல்கலைக்கழகத்திற்கு (Ocean University of Sri Lanka) வழங்க உள்ளது.

மேலும், 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்று (23) உள்ளூர் கடைகளில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...