15 9
இலங்கைசெய்திகள்

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பிரதான நிலை தேசிய பாடசாலைகளை தவிர மற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மேலும், தென் கொரியாவின் கொய்கா நிறுவனம் 85 பில்லியன் டொலர்களை ஓசியன் பல்கலைக்கழகத்திற்கு (Ocean University of Sri Lanka) வழங்க உள்ளது.

மேலும், 2700 உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் பலகைகளை பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு பாடசாலை வலையமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது அரசின் திட்டமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இன்று (23) உள்ளூர் கடைகளில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...