8 36
இலங்கைசெய்திகள்

சதோச சில்லறை விற்பனை நிலையங்களை 1000ஆக விரிவுப்படுத்தும் திட்டம் விரைவில்

Share

சதோச சில்லறை விற்பனை நிலையங்களை 1000ஆக விரிவுப்படுத்தும் திட்டம் விரைவில்

பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் சதோச சில்லறை விற்பனை நிலையங்களை 1,000ஆக விரிவுபடுத்தும் திட்டத்தை வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) அறிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில்(Anuradhapura) புதுப்பிக்கப்பட்ட சதோச விற்பனை நிலையத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில், அரசாங்கம் பொருட்களின் விலையை 17வீதமாக குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 1,000 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்தும் இலக்குடன், 2025 ஆம் ஆண்டில் 150இற்கும் மேற்பட்ட புதிய சதோச விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில், பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்குவதை உறுதிசெய்து, 40 அத்தியாவசியப் பொருட்களின் விலையை 8 வீதத்தால் குறைத்துள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...