அரசியல்இலங்கைசெய்திகள்

சஷி மேன்முறையீடு! – மே 30இல் பரிசீலனை

Share
சஷி 1 1
Share

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச போலி ஆவணங்களைக் கொண்டு, கடவுச்சீட்டைத் தயாரித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றிருந்ததற்கு அமைய, இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவால் சஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 5
உலகம்செய்திகள்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald...

20 6
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான்...

18 5
இலங்கைசெய்திகள்

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்....

16 5
இலங்கைசெய்திகள்

லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம்...