tamilni 13 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்!

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்!

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தநிலையில், சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவரது குடும்பத்தார் லங்காசிறிக்கு வழங்கிய தகவலில்,

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் சாந்தனின் தாயாரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கிரியைகள் நடத்தப்படும்.

மேலும், அங்கு பொது அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்படும்.

அதன் பின்னர் தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...