4 3 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் சாந்தனின் உயிரற்ற உடலை பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

Share

கொழும்பில் சாந்தனின் உயிரற்ற உடலை பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலை கொழும்பில் வைத்து திறந்து பார்த்த போது பெறும் அதிர்ச்சியடைந்ததாகவும் உடலில் மோசமான கீறல்களும், கோடுகளும், அடையாளங்களும் காணப்பட்டதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் க.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சாந்தனுக்கு இந்தியாவில் நேர்ந்த இன்னல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் வித்துடல் இலங்கைக்கு அனுப்பப்படும் போது தரம் குறைந்த பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்பட்டு அவருக்கு இந்தியாவிலும்,கொழும்பிலும் இரண்டு பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

சாந்தன் இறந்த பின்னர் கூட மனிதாபிமானத்தை கடைப்பிடிக்காத மாநில அரசு அவர் உயிரோடு இருக்கும் போது எவ்வாறு அவரை கையாண்டிருக்கும் என்பது வேதனையான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈழத்தமிழர்கள் உட்பட ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில், இந்த ஈழத்தமிழர்கள் முகாம்களிலேயே இறந்துவிட வேண்டும் என மத்திய அரசு செயற்பட்டதாகவும்,இதற்கு உடந்தையாக தமிழக அரசு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் மோசமான முறையில் கையாண்ட நிலையில், இந்த முகாம்களை உருவாக்கி ஈழத்தமிழர்களை தண்டித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப்போன்றே தற்போது கருணாநிதியின் மகனும் செய்து வருவதாகவும்,திட்டமிடப்பட்டு சாந்தன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறப்பு முகாமில் எஞ்சியுள்ள மூவரையும் விரைவில் நாட்டிற்கு அழைக்க வேண்டும் என்ற செய்தியையே சாந்தன் எமக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...