இலங்கைசெய்திகள்

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி

Share
5 2
Share

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி

இலங்கையில் (Sri Lanka) மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மின்சாரம், எரிசக்தி துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி பேச்சுவார்ததை நடாத்தியுள்ளார்.

இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால தீர்வின் முக்கியத்துவத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வடக்குக் கடலில் நடந்து வரும் கடற்றொழில் பிரச்சினைகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...