tamilnaadi 133 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு

Share

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய, சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் அதனை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன விபத்து இடம்பெற்ற இடத்தை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், விபத்து இடம்பெற்ற தினத்தன்று (ஜனவரி 24 ஆம் திகதி) அந்த இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோருமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...