tamilni 208 scaled
இலங்கைசெய்திகள்

சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு

Share

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா கிரிக்கெட் சுமத்தியுள்ளதாக முன்னாள் அமம்சசர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “சனத் ஜயசூரியவிற்கு எதிரான ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகம் தம்மிடம் தெரிவித்துள்ளது.

தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை இடைநிறுத்தி, இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை நியமித்த போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக விவகாரங்களில் சனத் ஜயசூரியவை எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவுறுத்தியது.

எனினும் அன்று அவ்வாறு நிபந்தனை விதித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைதி காப்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை”என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....