tamilni 41 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் விகாரை!! ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

Share

திருகோணமலையில் விகாரை!! ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

திருகோணமலை, இலுப்பைக்குளத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதன் காரணமாக அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை, பிராந்தியத்தில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்து, ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

99 வீதமான தமிழர்கள் வாழும் இந்தப்பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அது நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,அந்த இடத்தில் உள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள் பராமரிக்கப்படக் கூடாது என்று தாம் கூறவில்லை என கூறியுள்ளார்.

குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டுடன் கணிசமான அபிவிருத்தியை கருத்தில் கொள்ளும்போது சமூக சூழலை சீர்குலைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...